Wel Come

Tuesday, April 21, 2009

நட்பும் காதலும்

எதிர்பாரமல் எதிர்பட்டுவிடுகிறது நட்பின் தொடக்கம்...
எதிர்பார்த்தும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது காதலின் முடிவு...

வீழ்ந்த போது எழுந்த வரிகள்

எதிர் நோக்கும் காலமே எதிர் காலம் -ஏட்டில் கற்றிருப்பாய்
உனை எதிர்கின்ற காலமே எதிர் காலம் - புதிய பொருள் உணர்வாய் ! வாழ்க்கையில் போராட்டம் - வாடிக்கை என்றிருப்பாய்
வாழ்க்கையே போராட்டம் -மெதுவாய் தான் நீ உணர்வாய்
வீழ்வாய் எழுவாய் பெருமை அடைவாய் மீண்டும்
வீழ்வாய் வீழ்வாய் வாழ்வில் பொறுமை இழப்பாய் !
வாழ்க்கை கடலில் உனக்காக சில புயல்கள் உருவாகும்
உனை வீழ்த்தி சிதைத்து பின் தானாக அது திசை மாறும்
ஜான் ஏறினாள் முழம் சறுக்கும் அது பழைய மொழி
முழம் சறுக்கி முட்டி உடையும் இது புதிய மொழி
கல்லெறிந்து காயம் செய்வான் பழங்களை அள்ளி செல்வான்
நீர் ஊற்றி காத்து நிர்ப்பாய் ஏமாற்றம் ஏந்தி நிர்ப்பாய்
நீ விழும் போது ஆறுதல் சொல்லி ஆறுதல் அடைவான்
எழுந்து நின்று நடந்து பார் உன் மேல் ஆத்திரம் அடைவான் !
உனை அடக்கி ஆள ஆயிரம் வழி அறிந்து வருவான்
உனை அக்றிணை போல் நடத்தி காட்ட யோசனை செய்வான்
முகமில்லா வெற்றிக்கு முகவரிகள் பல நூறு
முட்டி கால் உடையாம அதை அடைந்தது யார் நீ கூறு !
வெற்றி என்ன மணப்பெண்ணா அழகா அவளை கை பிடிக்க?
அடி வாங்கி விழுந்து எழுந்து போ திடமா அவளை நீ பிடிக்க !
வானவில் வெளுத்தாலும் உன் நிறத்தை நீ இழக்காதே
தோத்து போய் திரும்பி வந்தா மீண்டும் துரத்தி போக தவறாதே !
கடல் அலைகள் தூங்கினாலும் உன் கண்ணை மட்டும் மூடாதே
உனை வீழ்த்த சதி நடக்குது என்பதை நீ மறவாதே !
வெற்றி நுனி அடைந்த பின்னும் மனமே நீ அசராதே
தள்ளி விட ஒருவன் இருப்பான் நீயும் அதை மறுக்காதே !

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கு நன்றி
மேலும் இது சம்பந்தமான கருத்துகளை எதிர் பார்க்கின்றேன்

About Me

My photo
பெரிதாக சொல்வதிற்கு இல்ல..